Wednesday, July 28, 2010

ஏன் வெங்காயம்?

பகுத்தறிவு பகலவன் பெரியார் அடிக்கடி சொன்னதால என் மனசுல நின்றிச்சோ?

ஒன்னும் இல்ல எதுவுமே இல்ல எல்லாம் எதோ மாயைனு தோனிடுச்சோ? உரிக்க உரிக்க ஒன்னும் இல்லன்னு நெனச்சுதான் வெங்காயம்னு வெச்செனோ?

நான் ஒரு டாக்டர், ஒரு வாத்தியார், ஒரு ரௌடி, ஒரு திருடன் இதெல்லாம் வெங்காயதோட மேல் தோல் மாதிரி. அது வெளில இருக்குற மண்ணு தூசு பட்டு எப்பிடி வேனா இருக்கும்
உரிக்க் உரிக்க எல்லா மனுசனுக்குல்லையும் கணமா ஒரே மாதிரி எதோ இருக்குன்னு தோணுதோ?

வெங்காயத்துல நெறைய சத்து இருக்காம். அது எதோ ANTI-OXIDANTAMல. வெங்காயம் சாப்புட்டா ஏதேதோ நோய் எல்லாம் கூட வராதாம். வெங்காயம் போட்டா சாம்பார் கூட்டு எல்லாம் ஜோரா இருக்கும் ருசி. ருசிய நெனச்சு வெங்காயம்னு வெச்சுடேனோ?

வெங்காயம் உரிக்க கண்ல நீர் எட்டி பார்க்கும்
இந்த பித்தனின் பிதற்றலில் கண்ணீர் எட்டி பார்க்கும் என்று நினைத்து வெங்காயம் என்று வெச்செனோ?

என்னமோ போங்கையா!!! இது என்ன பெரிய வெங்காயம்?

4 comments:

  1. வாங்க வெங்காயம்... :-)

    அறிமுகம் அருமை..

    நல்லபடியா தொடருங்க நண்பா!

    ReplyDelete
  2. Kindly Remove this word verification for comments.

    ReplyDelete
  3. add the posts in Tamilmanam.net and Tamilish and other sites also.

    ReplyDelete