Thursday, July 29, 2010

ஏன் இந்த வெங்காயம் பதிவு எழுதுறான்?

என்னைக்குமே ஒரு விஷயத்த ஒரே மாதிரி யோசிக்க மாட்டான் இந்த வெங்காயம். இன்னைக்கு சரின்னு சொல்றத நாளைக்கு கொஞ்சம் மாற்றி இது இன்னும் கொஞ்சம் சரியாய் இருக்குனு சொல்லுவான். இது ஒவ்வொரு நாளும் இந்த வெங்காயம் புதுசா தெரிஞ்சுகிரானோ இல்ல சரியாய் தெரிஞ்சுகிரானோ, எதுவா வேணா இருக்கலாம். இவன் இன்னிக்கு தப்பா கூட பேசலாம். அட கால மாற்றமா கூட இருக்க்கலாம்ய. இவன் எப்பிடி வளர்றான், எப்பிடி மாறுறான் என்பத பார்கத்தான் எழுதுறான்.

எல்லாரும் எல்லா விஷயத்தையும் அநுபவிச்சு இல்ல ஆராஞ்சு தெரிஞ்சுக்க முடியாதாம்ல. எங்கேயோ படிச்சதுதான். சில விஷயங்கள படிச்சும், கேட்டும் பக்குவ பட வேண்டியதுதான். அதுக்காக உருவானதுதான் இவ்வளவு புஸ்தகம், பாட்டு எல்லாம். அந்த வகைல இந்த வெங்காயம் எதோ எழுத நெனைக்கிறான்

இந்த வெங்காயத்துக்கு என்ன தோணுதோ அத எழுத போறான். பேச்சு நடைலேயே எழுத போரனாம்பா இந்த வெங்காயம்

அதெல்லாம் சரி, இவன் எங்க பதிவு பக்கம் வந்தான்னு கேக்குறிங்களா

வெற்றிக் கதிரவன்னு எனக்கு ஒரு நண்பன். அவன் ஒரு பதிவு எழுதுறவன்.. எனக்கும் எழுதனும்னு ரொம்ப நாளா தலைல ஓடிகிட்டு இருந்ததுதான். இந்த எண்ணமும், இந்த நண்பனும் சேர்ந்து இந்த வெங்கயத்த பதிவுல எழுத தூண்டிருக்கு

அதுக்கு வெற்றிக் கதிரவனுக்கும், மணற்கேணி சங்கத்துக்கும் ஒரு நன்றி போட்டறலாம்

வெங்காயத்தின் நன்றி

3 comments:

  1. //வெற்றிக் கதிரவன்னு எனக்கு ஒரு நண்பன்//

    கொஞ்சம் உஷாரா இருங்க... அவன் ரொம்ப நல்லவன்...

    எனக்கும் அவன் நண்பன் தான். :-)

    ReplyDelete