Friday, December 17, 2010

வெங்காயத் தன்மை 1

வெங்காயம் எதோட சேர்த்தாலும் அப்பிடியே ருசி அதிகமாயிடும். தோசைல போட்டா வெங்காய தோசை. ருசி ஜாஸ்தி. முட்டையோட போட்டா omlette. extra taste. சாம்பார்ல போட்டாலும் ருசி ஜோர்தான். அதே நேரத்துல வெங்காயத்த ஒன்னும்,பண்ணாம அப்பிடியே வெச்சுருந்தாலும் மாசக் கணக்குல ஒன்னும் ஆகாது. இப்ப ஏன் இப்பிடி ஒரு ஆராய்ச்சின்னு கேட்கறிங்களா? கீழ படிங்க.

இந்த வெங்காயம் இருக்கானே அவன் எல்லார்டையும்,நல்லா பழகிடுவான். அப்பிடியே நட்பு பொங்கி வழியும். பாசமும் பொங்கி வழியும். ரொம்ப சந்தோசமா சுத்துவான். ஒத்துக்காம போன ஆளுங்க ஒன்னுதான் ஞாபகம் இருக்கு இந்த வெங்காயத்துக்கு. சாதரணமா இந்த வெங்காயத்தோட பழகுறவங்களும் சரி இது இப்பிடியே நல்ல நண்பனா பழகிட்டு இருக்கும்னு நெனப்பாங்க. சாதாரண எதிர்பார்ப்பு தானே!!!

ஆனா இந்த வெங்காயம் அந்த பழகுன நண்பர்களை விட்டு எங்கயாவது தள்ளி போவுதுன்னு வெச்சுகங்களேன். அது வேலை மாறி போறதா இருக்கலாம் இல்ல வீடு மாறி போறதா இருக்கலாம். அவ்வளவுதான், பழைய நண்பர்கள்ட பேசுறதே குறைஞ்சுடும். ஒரு தொலைபேசி அழைப்பு கூட பண்ணாது. இத விட கேவலம் என்னன்னா, அவங்க கூப்பிட்டா கூட தொலைபேசில பேசாது. இன்னும் அவமானமான விஷயம் என்னன்னா அவன் நண்பர்கள் கல்யாணத்துக்கோ இல்ல ஒரு நல்ல விஷயதுக்கோ கூட அழைச்சு பேசாது. அப்பறம் பேசலாம்னு தோணும். எப்பயாவது இதுவா போன் பண்ணும். இத்தனைக்கும் அவங்களோட ஒரு பிரச்னையும் இருக்காது. அது என்ன திமிரு? எங்க போனாலும் இந்த வெங்காயத்துக்கு நண்பர்கள் அமையுறாங்க அப்பிடிங்கிற திமிரோ? இல்லையே. ரொம்ப நாலா யாருமே இல்லாம தனியா இருந்துருக்கு இந்த வெங்காயம். குறைச்சலா ஆறு மாசம் அப்பிடி இருந்தது ஞாபகம் இருக்கு. இப்படி பைத்தியம் மாதிரி பண்றது வெங்காயத்துக்கு இருக்கிற பெரிய குறைதான்.

எதுலயும் ஒரு ஈடுபாடு இல்லாததுனால இப்பிடியோ?. அதுல ஒரு நம்பிக்கைதான் இந்த வெங்காயத்துக்கு. பெரிய சித்தரா இவரு? அவ்வளவு பெரிய ஞானியா இருந்தா யார்கிட்டயும் பழகாம இருக்கட்டும் சிடு மூஞ்சியா. இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர் இல்ல. நிறைய பேர்கிட்ட இப்பிடி பண்ணிடிச்சி.

ஆனா இந்த வெங்காயத்துக்கும் தோணுது. பேசணும். ஐயோ இவங்க வருத்த பட்ராங்கலேன்னு. ஆனா அப்பிடியே இருக்கும். ஒன்னும் பண்ணாம இந்த தத்தி முண்டம். இத மாத்தனும்.

எவ்வளவு நல்ல நண்பர்கள் இந்த வெங்காயத்துக்கு. இந்த பதிவு எழுதுறதே இந்த மாதிரி பண்ண நண்பர்கள்கிட்ட இந்த வெங்காய தன்மைய சொல்றதுக்கு தான். மன்னிப்பு கேட்டா பண்ணது சரி ஆகாது.

இந்த பதிவ படிச்சி படிச்சி, ஏதாவது மன மாற்றத்த பண்ண முடியும்னு நம்புது இந்த வெங்காயம்

இப்ப ஒரு நண்பருக்கு தொலை பேசியில் அழைப்பு!!!

No comments:

Post a Comment