Saturday, December 25, 2010

வெங்காயத்தின் இலக்கிய ஆர்வம்

வெங்காயம் படித்த சில இலக்கிய நூல்கள்

கல்கி - பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம்
பால குமாரன் - இரும்புக் குதிரைகள் , கிருஷ்ண அர்ஜுனன், தாயுமானவன் , இனி எல்லாம் சுகமே, தோழன், கருணை மழை, கடலோர குருவிகள் கற்றுக்கொண்டால் குற்றமில்லை , சிம்மாசனம்
சுஜாதா - மெரினா , காயத்ரி , என் இனிய இயந்திரா, மூன்று நாள் சொர்க்கம்
ஜெய காந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள்
வைரமுத்து - தண்ணீர் தேசம்

வெங்காயத்தை கவர்ந்தவை -

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஒரு நாள்ல 400 பக்கம் படிக்க முடியும்னு இந்த புஸ்தகம் படிச்சபதான் தெரிஞ்சுது. computerla மெமரி டம்ப் (memory dump) நு சொல்லுவாங்க. அந்த மாதிரி என்ன ஒரு ஆக்கம். ஒரு பொண்ணோட மனதையும் அவ சிந்திப்பதையும் என்னாமா எழுதி இருக்காரு. தப்பு சரி ரெண்டுமே மனுஷங்க சொன்னது. இன்னைக்கு ஒருத்தன் நல்லவன். நாளைக்கு அவனே கேட்டவன். இன்னிக்கு கெட்டவன் நாளைக்கு நல்லவன். தலைல பல்பு எரியுதுபா புக்க படிச்சுட்டு.

பொன்னியின் செல்வன் - நான் படிச்ச முதல் தமிழ் நாவல். வரலாற்றோட சேர்ந்து நல்ல கற்பனை. நல்ல கதை, நல்ல கதா பாத்திரம், மொத்ததுல நல்ல வரலாற்று நாவல்பா

கருணை மழை - அத்வைத கதை. பால குமாரன் நல்லா உள்ள எறங்கி எழுதி இருப்பாரு.என் கண்ல தண்ணி வந்துடுதுடா கடைசியில. ஒரு உருக்கமான கதை

காயத்ரி - வெங்காயம் படிச்ச நூலாசிரியர்கல்லேயே சின்னதா ஆனா பயங்கர சுவாரஸ்யமா கதை எழுதுறதுன்னா அது சுஜாதா அவர்கள் தான். சூப்பர் suspense கதை இந்த காயத்ரி. இவர வெங்காயம் நேர்ல ஒரு தடவை பார்த்திருக்கலாம். அவர் பொய் சேர்ந்துட்டாரு வெங்காயத்துக்கு இலக்கியம் ஆர்வம் வர்றதுக்கு முன்னாடியே

No comments:

Post a Comment