Friday, July 30, 2010

ஆக்கலும் அழிதலும்

எதுவுமே புதுசா உருவாகுறதும் கெடயாது எதுவும் அழியறதும் கெடயாது. ந்யுட்டன் விதியோட கொஞ்சம் மாற்றினது தான். அவர் சக்தி புதிதாக தோன்றுவதும் இல்லை அழிவதும் இல்லைனாறு. நான் அத கொஞ்சம் விரிவுபடுத்தி இருக்கேன்.

சக்தி மட்டும்ல நியுட்டா. இந்த உடல், ஆன்மாகூட அப்பிடிதானு தோணுது. மண்ணு தின்கிற உடம்புன்னு சொல்லும் போது ஒன்னும் பெரிசா யோசிக்கல. அந்த வாக்கியத்த நல்லா பார்த்தா என்ன ஒரு நிஜம். உசுரு போன வுடனே இந்த உடம்ப எரிசாலும் புதைச்சாலும் இல்ல ஒண்ணுமே பண்ணாம அப்பிடியே மக்க விட்டாலும் மன்னோடத்தான் கலந்தவனும். அந்த மண்ணு எடுத்து ஒருத்தன் வீட்டையோ எதையோ கட்டிடானு வெச்சுப்போம். நேத்து உடம்பா இருந்த ஒரு பொருள் இன்னிக்கு ஒரு கட்டடமா ஆயிடுச்சு. அப்பிடியே உல்டாவா யோசிச்சேன்னா இப்போ கட்டடமா (பொதுவா அக்ரினையா) இருக்குற ஒரு இது, நேற்று ஒரு உயிரினையின் உடம்பாகவோ அல்லது உடம்பின் ஒரு பகுதியாவோ இருந்திருக்கலாம். கல்லாதான் ஆவனும்னுல. அந்த மண்ணுல செடி முளைக்கலாம். பருத்தியா இருக்கலாம். அரிசியா இருக்கலாம். பருத்திய நாம துணியாக்கி போட்டுக்கலாம் இல்ல அரிசிய பொங்கி சாப்பிடலாம். எளிமையா புரிஞ்சுக்க வெறும் மனுசன வெச்சு பார்த்தோம். உலகத்துல இருக்குற மற்ற உயிரினத்தையும் உள்ள கொண்டு வருவோம். பருத்தி கொட்டைய மாட்டுக்கு வைக்கலாம். அது உடம்புல சதையா சேரலாம். இல்ல பாலா வந்து நாம குடிக்கலாம். இல்ல சானமா வரலாம். இப்பிடி ஒரே பொருள்தான் மாறி மாறி சுத்திகிட்டே இருக்கு.

இதுக்கு அறிவியல் ரீதியா எடுத்து காட்டு சொல்லலாம்.

தண்ணி வெப்பத்தால நீராவி ஆகி வானத்துல மேகமா திரியுது. அப்பறம் திரும்ப குளிர்ந்து மழையா வருது. ரொம்ப குளிர்ந்டுதுன்னா பனிக்கட்டி ஆவுது. இந்த மாற்றத்தில் திடம்(solid), நீர்மம்(liquid) மற்றும் வாயுகலாக(gas) ஒரே மூலகுறுதான்(molecule). தண்ணீர்...

பல நூறு ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்த கரிமங்கள் (Organic - மரம், செடி, விலங்கினங்களின் உடற் கூறுகள்) நிலக்கரிகலாக மாறுகின்றன. நாளடைவில் அவை கிராஃபைட்டு (Graphite), வைரம் மற்றும் பாறைநெய் (Petroleum) இப்படி உரு மாறுகின்றன. இவைகளின் மூலக்கூறுகள் வெவ்வேறு. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் வெவ்வேறு தொகுப்புகளாய் சேர்வதால் வரும் வித்தியாசங்கள். மேலும் விவரங்கள் வேதியியல் பாடத்தில் காணலாம்

இன்னும் சற்று ஆழ்ந்து பாப்போம்.

எல்லா உயிரினையும் அக்ரினையும் அணுக்களின் கூறுகளே. ஒவ்வொரு அணுவும்(Atom) நேர்மின்னி(Proton), எதிர்மின்னி(electron) மற்றும் நொதுமி(Neutron) இவைகளால் ஆனது. ஒரு நேர்மின்னி, ஒரு எதிர்மின்னி மற்றும் ஒரு நொதுமி உள்ள அணு ஹைட்ரஜன் எனப்படுகிறது. இரண்டு நேர்மின்னி, இரண்டு எதிர்மின்னி மற்றும் இரண்டு நொதுமி உள்ள அணு ஹீலியம் எனப்படுகிறது. தங்கம் 79 நேர்மின்னி மற்றும் 79 எதிர்மின்னி கொண்டது. இரண்டு ஹைட்ரஜன் அணு, ஒரு உயிர்வாயு (oxygen) அணு சேர தண்ணீர் உண்டாகிறது. ஒரு கல்சியம் (calcium) அணு, ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு உயிர்வாயு அணு சேர சுண்ணாம்பு உருவாகிறது. மண் சிலிக்கா அணுக்களால் (17 நேர்மின்னி மற்றும் 17 எதிர்மின்னி) ஆனது.

அணுக்களில் எதிர்மின்னி, நேர்மின்னி அதிகரிக்க வாயு தன்மையில் இருண்டு திரவ தன்மைக்கும் பின் திட தன்மைக்கும் மாறுகிறது. எடுத்து காட்டாக ஹைட்ரஜன் வாயு. சோடியம் (உப்பு) திடம் ஆனாலும் நீரில் கரையும் தன்மை கொண்டது. திரவம் என்றே கொள்ளலாம். தங்கம், இரும்பு திட பொருட்கள்.

மேற்கண்ட பத்தியிலிருந்து இவ்வாறு யோசிக்கலாம். 79 ஹைட்ரஜன் அணுக்களை ஒன்று சேர்த்தல் தங்கம் ஆகிவிடுமோ என்று. ஆம் ஆகலாம். நேர்மின்னி எதிர்மின்னிகல் இடம் மாற எது வேண்டுமானாலும் எப்பிடி வேண்டுமானாலும் மாறலாம். மண் தங்கம் ஆகலாம். கரி இரும்பாகலாம்.

எதுவும் புதிதாக வருவது இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. அது சில சமயங்களில் நேராகவே நமக்கு புரிகிறது. சிலவற்றை நாம் இன்னும் அறிவியல் ரீதியாக உறுதி படுத்த வில்லை.

(இததான் விடலசாரியார் அடிப்படைய வெச்சு படம் எடுத்தாரோ... சித்தர்கள் இதைத்தான் புரிஞ்சு, எப்பிடி மாற்றனும்னு தெரிஞ்சுகிட்டு இருப்பாங்களோ?)

எளிமையா சொன்னோம்னா
இங்க இருக்குற அணுக்கள் தான் மாறி மாறி வேற வடிவம் எடுத்துட்டு இருக்கு

வெங்காயம் உரிச்சு கண்ணு எரியுதுபா!!! பொருள பார்த்தாச்சு!!! இத இயக்குர உயிரு, ஆன்மாநு சொல்றங்களே... அதுவும் இந்த மாதிரித்தான் எதோ சுத்தி சுத்தி வருது
இத பத்தி அப்பறம் உறிக்கிறேன் வெங்காயம்!!! வெங்காயம்!!!

No comments:

Post a Comment